மத்திய பா.ஜனதா அரசின் ஓரவஞ்சனைகள் தோலுரிக்கப்பட்டுள்ளன: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

திராவிட மாடல் நலத்திட்டங்களை எடுத்துச்சொல்லி, மத்திய அரசின் ஓரவஞ்சனைகளை தமது பேச்சாளர்கள் தோலுரித்ததாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழகம் முழுவதும் தி.மு.க. அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டங்கள் நடந்து வருகிறது.

இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-

எல்லோருக்கும் எல்லாம். 161 பொதுக்கூட்டங்கள், 90 பேச்சாளர்கள், லட்சக்கணக்கான மக்கள். தமிழ்நாட்டை வளமாக்கும் நமது பட்ஜெட் விளக்கும் பொதுக்கூட்டங்கள்.

திராவிட மாடல் நலத்திட்டங்களை எடுத்துச்சொல்லி, மத்திய பா.ஜனதா அரசின் ஓரவஞ்சனைகளைத் தோலுரித்த நமது பேச்சாளர்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com