விஜயகாந்த் உடலுக்கு இன்று மத்திய அரசு மரியாதை: வருகை தரும் நிர்மலா சீதாராமன்

மத்திய அரசு சார்பில் விஜயகாந்த் உடலுக்கு இன்று மரியாதை செய்யப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
விஜயகாந்த் உடலுக்கு இன்று மத்திய அரசு மரியாதை: வருகை தரும் நிர்மலா சீதாராமன்
Published on

சென்னை,

தேமுதிக நிறுவனரும், பிரபல திரைப்பட நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரின் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்கான வைக்கப்பட்டு இன்று 4.45 மணிக்கு அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

அவரது உடலுக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தீவுத் திடலில் வைக்கப்படுகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் இருந்து இன்று காலை 6 மணிக்கு விஜயகாந்தின் உடல் தீவுத்திடலுக்கு மாற்றப்படும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணி வரை தீவுத்திடலில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட உள்ளது. பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் இன்று மாலை 4.45 மணிக்கு விஜயகாந்தின் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

இந்நிலையில் இன்று மத்திய அரசு சார்பில் விஜயகாந்த் உடலுக்கு மரியாதை செய்யப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு சார்பில் பிரதிநிதி ஒருவர் நேரில் வந்து விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த உள்ளார். இதன்படி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் விஜயகாந்த் உடலுக்கு இன்று அஞ்சலி செலுத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக விஜயகாந்த் மறைவுக்கு நேற்று பிரதமர் நரேந்திர மேடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியேர் தங்களது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து இருந்தனர். மேலும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சென்று விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தி இருந்தார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com