6 வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும்: அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம்

6 வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. #CauveryManagementBoard
6 வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும்: அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம்
Published on

சென்னை,

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தலைமையில் சென்னை- ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், உச்ச நீதிமன்ற தீரப்பின் படி 6 வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பட்ஜெட் தொடரில் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் எவ்வாறு நடக்க வேண்டும் என்பது குறித்து முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ.,க்களுக்கு அறிவுறுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com