சாமுண்டேஸ்வரி அம்மன் கோவில் குடமுழுக்கு

சிதம்பரநாதபுரம் சாமுண்டேஸ்வரி அம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது.
சாமுண்டேஸ்வரி அம்மன் கோவில் குடமுழுக்கு
Published on

திருப்பனந்தாள்:

திருப்பனந்தாள் அருகே சிதம்பரநாதபுரம் கிராமத்தில் சாமுண்டேஸ்வரி அம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு குடமுழுக்கு நடந்தது. முன்னதாக யாக சாலை பூஜைகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. இதை தொடர்ந்து கடங்கள் புறப்பாடாகி கோவில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து சாமுண்டேஸ்வரி அம்மன் வீதி உலா காட்சி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், கிராமமக்கள் செய்திருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com