சென்னை சென்டிரல் - கோவை இடையிலான வந்தே பாரத் ரெயில் சேவையில் மாற்றம்

கோப்புப்படம்
திருநின்றவூர் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
திருநின்றவூர் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, பெங்களூருவில் இருந்து சென்னை சென்டிரல் வரும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12608) வருகிற 23-ந் தேதி, காட்பாடி-சென்னை சென்டிரல் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில் கோவையில் இருந்து சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (12680) காட்பாடி-சென்னை சென்டிரல் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
திருப்பதியில் இருந்து சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16054) 23-ந் தேதி அரக்கோணம்-சென்னை சென்டிரல் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில், சென்னை சென்டிரலில் இருந்து கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (12679) சென்டிரல்-காட்பாடி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை சென்டிரலில் இருந்து பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12607) 23-ந் தேதி சென்னை சென்டிரல்-காட்பாடி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில், சென்டிரலில் இருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16053) சென்டிரல்-அரக்கோணம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை சென்டிரலில் இருந்து கோவை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் (20643) வருகிற 23-ந் தேதி ஒரு மணி நேரம் தாமதமாக மதியம் 3.15 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து புறப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






