திருச்சி-பாலக்காடு, பிலாஸ்பூர்-எர்ணாகுளம் ரெயில்கள் சேவையில் மாற்றம்

பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில்கள் சேவையில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர்,
ஊத்துக்குளி-திருப்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளம் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகளை எளிதாக்கும் வகையில் குறிப்பிட்ட ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி-பாலக்காடு எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.16843) நாளை (வெள்ளிக்கிழமை), 25 மற்றும் 27-ந்தேதிகளில் திருச்சியில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு ஊத்துக்குளி ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் நிறுத்தப்படும். பணிகள் முடிந்ததும் ஊத்துக்குளியில் இருந்து பாலக்காடுக்கு முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரெயிலாக இயக்கப்படும். பிலாஸ்பூர்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (22815) வருகிற 26-ந்தேதி பிலாஸ்பூரில் இருந்து புறப்பட்டு 27-ந்தேதி சேலம்-கோவை ரெயில் நிலையங்களுக்கு இடையே வசதியான இடத்தில் 2 மணி நேரம் 10 நிமிடங்கள் நிறுத்தப்படும்.
மேற்கண்ட தகவலை ரெயில்வே கோட்ட அதிகாரி மரியா மைக்கேல் தெரிவித்துள்ளார்.






