வேதாரண்யேஸ்வரர் கோவிலில் சதுர்த்தி விழா

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் சதுர்த்தி விழா
Published on

வேதாரண்யம்:

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வீரகத்தி விநாயகர்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள வீரகத்தி விநாயகர், ராமர் ராவணனை வதம் செய்துவிட்டு வரும்போது பின் தொடர்ந்து வந்த ஹத்திதோஷத்தை (கொலை) எட்டி உதைத்து தோஷத்தை போக்கியதாக வரலாறு.

இந்த கோவிலில் உள்ள வீரகத்தி விநாயகருக்கு ஆண்டு தோறும் சதுர்த்தி விழா நடைபெறுவது வழக்கம்.

சதுர்த்தி விழா

அதன்படி இந்த ஆண்டு விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. முன்னதாக கணபதி பூஜை, ஹோமம் உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகள் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாநாட்களில் தினமும் விநாயகர் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்களும், உபயதாரர்களும் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com