சென்னை: கத்தார் செல்லும் விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு

சென்னையில் இருந்து கத்தார் செல்லும் விமானத்தில் திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறால் பரபரப்பு நிலவியது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சென்னையில் இருந்து இன்று கத்தார் செல்லும் விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக 336 பயணிகளுடன் பறக்க தயாராக இருந்த போது விமானத்தில் இருந்த இயந்திரக் கோளாறை விமானி கண்டறிந்தார்.

இதனைத்தொடர்ந்து ஓடுபாதை அருகே அவசரமாக விமானத்தை நிறுத்தியதால், அதிர்ஷ்டவசமாக அனைவரும் தப்பினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com