சென்னை கிண்டி பூங்கா நாளை திறந்திருக்கும் - பூங்கா நிர்வாகம் அறிவிப்பு

மிலாடி நபியை முன்னிட்டு பார்வையாளர்களுக்காக பூங்கா திறக்கப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா மற்றும் பாம்புப் பண்ணை பார்வையாளர்களுக்காக நாளை (செப்.17) திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படும் நிலையில், நாளை மிலாடி நபி அரசு விடுமுறை என்பதால் பூங்கா திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நாட்டிலேயே மிகப்பெரிய, பழமையான உயிரியல் பூங்காவாகும். இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வன உயிரினங்கள் பராமரிக்கப்படுகின்றன. சென்னை, புறநகர் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு முக்கிய பொழுதுபோக்கு இடமாகவும் இது திகழ்ந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com