சென்னை ஐ.ஐ.டி. மாணவி பலாத்கார வழக்கு: பேராசிரியர்கள் முன் ஜாமீன் மனு இன்று விசாரணை

சென்னை ஐ.ஐ.டி. மாணவி பலாத்கார வழக்கு: பேராசிரியர்கள் முன் ஜாமீன் மனு இன்று விசாரணை வருகிறது.
சென்னை ஐ.ஐ.டி. மாணவி பலாத்கார வழக்கு: பேராசிரியர்கள் முன் ஜாமீன் மனு இன்று விசாரணை
Published on

சென்னை,

சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவி ஒருவர் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை பி.எச்.டி. படித்தார். அவர் ஐ.ஐ.டி. விடுதியில் தங்கி இருந்தார். இவர் படித்த காலத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இவர் மேற்கு வங்க மாநிலம் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்.

கடந்த 2020-ம் ஆண்டு இவர் படிப்பை முடித்து விட்டார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் இவர் சென்னை கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பரபரப்பு புகார் மனு கொடுத்தார்.

கோட்டூர்புரம் போலீசார் பாலியல் துன்புறுத்தல், மானபங்கம் உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மாணவியிடம் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது. அந்த வாக்கு மூலத்தில் 8 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அதன்படி 2 ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் உள்ளிட்ட 8 பேர் மீதும் வழக்கு போடப்பட்டது.

இந்த வழக்கை விசாரிக்க மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், சென்னை ஐ.ஐ.டி. மாணவி பலாத்கார வழக்கில், முன் ஜாமீன் கேரி பேராசிரியர்கள் இருவர் தாக்கல் செய்த மனு, சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com