சென்னை: மின்சார ரெயிலில் இருந்து தவறி விழுந்த பயணி உயிரிழப்பு

சம்பவம் குறித்து மாம்பலம் ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை,
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி மின்சார ரெயில் ஒன்று நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. அந்த ரெயிலில் ரமேஷ் (வயது 48) என்பவர் பயணம் செய்தார்.
சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில் நுழைந்தபோது, ரமேஷ் ஓடும் ரெயிலில் இருந்து தவறி நடைமேடையில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மாம்பலம் ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





