சென்னை : பூக்கடை பகுதியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 லட்சம் மற்றும் 16.530 கிலோ வெள்ளி கட்டிகள் பறிமுதல்

சென்னை பூக்கடை பகுதியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 லட்சம் மற்றும் 16.530 கிலோ வெள்ளி கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

சென்னை,

தமிழக சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பை அடுத்து தேர்தலில் முறைகேடு நடைபெறுவதை தடுக்க தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்

இந்நிலையில் இன்று சென்னை துறைமுகம் தொகுதிக்கு உள்பட்ட பூக்கடை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாகனம் ஒன்றில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 16.530 கிலோ வெள்ளிக் கட்டிகள் மற்றும் ரூ. 4 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com