சென்னை: ரெயில்முன் தள்ளி மாணவி கொலை; கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் ஓடும் ரெயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: ரெயில்முன் தள்ளி மாணவி கொலை; கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
Published on

சென்னை,

சென்னை கிண்டியை அடுத்த ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்(23) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த 2ஆம் ஆண்டு கல்லூரி மாணவி சத்யா(20) என்பவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை நடந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், பரங்கிமலை ரெயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த மின்சார ரெயிலில் சத்யாவை தள்ளிவிட்டுள்ளார். இதில் ரெயிலில் சிக்கி சத்யா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஓடும் ரெயிலில் மாணவியை தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சதீஷை 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில், இன்று அதிகாலை சென்னை துரைப்பாக்கத்தில் வைத்து அவரை கைது செய்தனர். இதையைடுத்து அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தினர்.

இந்த நிலையில், ஓடும் ரெயிலில் மாணவியை தள்ளிவிட்டு கொலை செய்த சதீஷுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து சைதாப்பேட்டை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும், அவரை வருகிற 28-ந் தேதி வரை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com