சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு தடை கேட்டு வழக்கு

சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு தடை கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு தடை கேட்டு வழக்கு
Published on

சென்னை,

பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தின் காரணமாக காஞ்சீபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த திட்டம் தேசிய நெடுஞ்சாலை சட்டப்படி செயல்படுத்தப்பட உள்ளது. அந்த சட்டத்தின் படி நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக அறிவிப்பாணை வெளியான 21 நாட்களுக்குள் பாதிப்புக்குள்ளாகும் மக்கள் தங்களது ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம்.

ஆனால் தற்போது மக்களிடம் இதுதொடர்பாக எந்த கருத்துகளும் கேட்கப்படவில்லை. நில ஆர்ஜித சட்டம் 1894-ஐ மாற்றி கடந்த, 2013-ம் ஆண்டு மத்திய அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. நியாயமான இழப்பீடு, மறுவாழ்வு, மறு குடியமர்வு மற்றும் வெளிப்படையான நில ஆர்ஜிதம் என்ற அந்த சட்டம் கடந்த 2014-ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது.

இந்த சட்டத்தின்படி, உள்ளாட்சி அமைப்புகளிடமும், கிராம சபையிடமும் நிலம் ஆர்ஜிதம் குறித்து உரிய ஆலோசனை நடத்த வேண்டும். அப்போது, நில ஆர்ஜிதம் குறித்து கேள்வி எழுப்பவும் மக்களுக்கு உரிமை உள்ளது.

ஆனால், இந்த புதிய சட்டப்பிரிவு 105, எதற்காக நில ஆர்ஜிதம் செய்யப்படுகிறது? என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டாம் என்று உள்ளது. இந்த பிரிவு ஒட்டுமொத்த சட்டத்துக்கு எதிராக உள்ளது. அதனால், இந்த பிரிவை ரத்து செய்ய வேண்டும்.

சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com