செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவிற்கு சென்னையில் உற்சாக வரவேற்பு

டாடா ஸ்டீல்ஸ் செஸ் தொடரின் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தா சென்னை திரும்பினார்
சென்னை,
நெதர்லாந்தில் நடைபெற்ற டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் 2025 செஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை தமிழக வீரர் பிரக்ஞானந்தா வென்றுள்ளார். இறுதிப் போட்டியில் மற்றொரு தமிழக வீரர் குகேஷை எதிர்த்து விளையாடிய பிரக்ஞானந்தா டை பிரேக்கிற்கு பிறகு வெற்றி பெற்றார். தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரக்ஞானந்தா கடைசியில் விளையாடிய மூன்று போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று அசத்தினார். இதன் மூலம் அவர் புள்ளிகள் பட்டியலில் முன்னேறி பட்டத்தை கைப்பற்றி உள்ளார்.
இந்நிலையில், டாடா ஸ்டீல்ஸ் செஸ் தொடரின் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தா இன்று சென்னை திரும்பினார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது . இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரக்ஞானந்தா கூறியதாவது,
இந்த போட்டிக்காக சிறந்த முறையில் பயிற்சி பெற்றேன். . இந்த வெற்றியானது, எனக்கு மிகவும் முக்கியமானது . போட்டி மிகவும் கடுமையாக இருந்தது . போட்டியின் போது முடிவெடுக்க குறைவான நேரமே இருந்தது . இந்தாண்டு தொடக்கத்திலேயே எனக்கு வெற்றி கிடைத்திருக்கிறது . என தெரிவித்தார் .