செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு வாகன அணிவகுப்பு

திண்டுக்கல்லில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு வாகன அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது.
செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு வாகன அணிவகுப்பு
Published on

சென்னையில் பல்வேறு நாடுகள் பங்கேற்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், விளையாட்டு மைதானங்கள், பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு செஸ் போட்டி நடத்தப்படுகிறது.

அதேபோல் பள்ளி, கல்லூரி வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்களின் அணிவகுப்பு  நடைபெற்றது. திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய வாகன அணிவகுப்பை கலெக்டர் விசாகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த வாகன அணிவகுப்பு நாகல்நகர் ரவுண்டானா, அரசு மருத்துவமனை, திருச்சி சாலை, ஆர்.எம்.காலனி, தாடிக்கொம்பு சாலை, பழனி சாலை வழியாக வலம் வந்தது. இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ்பாத்திமா மேரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com