சிதம்பரம்: வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை கொள்ளை

சிதம்பரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சிதம்பரம்: வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை கொள்ளை
Published on

சிதம்பரம்,

சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலை நகர் வடக்குமாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சுலோச்சனா (வயது 42). வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சுலோச்சனா தனது வீட்டை பூட்டி விட்டு வடலூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அதை தொடர்ந்து சுலோச்சனா நேற்று இரவு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பின் பக்க கதவுகள் உடைக்கப்பட்டு, திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள்,துணிமணிகள் சிதறி கிடந்தது. அப்போது பீரோவில் இருந்த 20 பவுன் நகை, ரூ.5ஆயிரம் பணம் திருடு போனது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து சுலோச்சனா சிதம்பரம் அண்ணாமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.த்கவல் அறிந்து வந்த போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் குறித்து சிதம்பரம் அண்ணாமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணாமலை நகர் பகுதியில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com