கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.3,000 கோடி வழங்க பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.3,000 கோடி வழங்க பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.3,000 கோடி வழங்க பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
Published on

சென்னை,

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி 15 மாநில மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுடன் காணொளிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினர்.

இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க 3 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தார்.

இந்த ஆலோசனையின் பேது முதலமைச்சர் பழனிசாமி கூறியதாவது;-

* தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1000 கேடி வழங்க வேண்டும்,

* 2020-21-ம் நிதியாண்டுக்கான உள்ளாட்சி அமைப்பு நிதியில் 50 சதவீதத்தை வழங்க வேண்டும்,

* சிறுகுறு தெழில் வளர்ச்சிக்கு ரூ.1000 கேடியை வழங்க வேண்டும்,

* தமிழ்நாடு தெழில் முதலீட்டு கழகத்துக்கு மறு நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.1000 கேடி வழங்க வேண்டும் என்றும் மார்ச் மாதம் வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவை தெகையை உடனே விடுவிக்க வேண்டும்,

* கொரோனா தடுப்பு பணிக்கு, மருத்துவ உபகரணங்கள் வாங்க 3 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்திய முதலமைச்சர், எல்லையில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் மத்திய அரசுக்கு தமிழகம் ஆதரவாக இருக்கும் என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com