பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டியை தன் கையால் பரிமாறி, பின் ஊட்டிவிட்ட முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

1 முதல் 5 வரையிலான பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் இன்று தொடங்கி வைத்தார்.
பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டியை தன் கையால் பரிமாறி, பின் ஊட்டிவிட்ட முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

மதுரை,

தமிழகத்தின் மாநகராட்சி, நகராட்சி, ஊரகம் (கிராம ஊராட்சி) மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் (1 முதல் 5-ம் வகுப்பு வரை) படிக்கும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ, மாணவிகளுக்கு முதல் கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டத்தை ரூ.33.56 கோடி செலவில் செயல்படுத்துவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் என்ற பெயரில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை இன்று (வியாழக்கிழமை) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைத்தார்.

மதுரை ஆதிமூலம் மாநகராட்ட்சியில் உள்ள பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு காலை உணவை பரிமாறிய முதல் அமைச்சர், பின்னர் மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டார். அப்போது தன் அருகில் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த மாணவர்களுக்கு முதல் அமைச்சர் உணைவை ஊட்டி மகிழ்ந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com