

சென்னை,
சட்டசபை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றிய தவெக, சில கட்சிகளின் ஆதரவுடன் தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ளது. முதல்-அமைச்சராக விஜய் கடந்த 9-ந்தேதி பதவியேற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து பிற அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
இந்த நிலையில், அரசுமுறை பயணமாக முதல்-அமைச்சர் விஜய் நாளை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி செல்லும் விஜய், அங்கு பிரதமர் மோடியை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது தமிழக நலன் சார்ந்த திட்டங்களுக்கு நிதி கோர இருக்கிறார். அதனை தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்முவையும், மந்திய மந்திரிகளையும் சந்திக்க உள்ளார். மேலும், ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களையும் முதல்-அமைச்சர் விஜய் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றப்பின்னர் பிரதமர் மோடியை விஜய் சந்திக்க உள்ள நிகழ்வு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.