சென்னை மாநகராட்சி பகுதிகளில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் : நாளை நடக்கிறது

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள் மக்களுடன் முதல்வர் முகாம்கள் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் : நாளை நடக்கிறது
Published on

சென்னை

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழக அரசின் திட்டங்கள் எளிதில் மக்களை சென்றடையும் வகையில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 5-ந்தேதி (நாளை), 6-ந்தேதி (நாளை மறுநாள்) ஆகிய 2 நாட்களில் மக்களுடன் முதல்வர் முகாம்கள் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.

இந்த முகாம்களில் பட்டா, ஓய்வூதியம், மருத்துவ காப்பீடு உள்பட பல்வேறு திட்டங்களில் பயன் பெற மக்கள் தங்கள் மனுக்களை கொடுத்து, தீர்வு காணலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com