முந்திரி சாப்பிட்டதால் குழந்தை பலி - சென்னையில் பரிதாபம்

சகோதிரியுடன் விளையாடிக் கொண்டே முந்திரி பருப்பை சாப்பிட்டபோது குழந்தைக்கு முச்சுத் திணறல் எற்பட்டது.
முந்திரி சாப்பிட்டதால் குழந்தை பலி - சென்னையில் பரிதாபம்
Published on

சென்னை,

எம்.ஜி.ஆர். நகர், மாணிக்கவாசகம் தெருவை சேர்ந்தவர் சிவகுமார். தனியர் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். மனைவி அருணா. இவர்களுக்கு 2 மகள்கள் இருந்தனர். இளைய மகள் ஹரிவர்த்தினி (வயது 2 1/2) நேற்று இரவு வீட்டில் இருந்த சிறுமி ஹாரிவர்த்தினி தனது சகோதிரியுடன் முந்திரி சாப்பிட்டுக் கொண்டே விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென ஹரிவர்த்தினி முச்சுத் திணறலில் கஷ்டப்படுகிறாள். அடுத்த சில நெடிகளில் சிறுமி மயங்கி விழுந்தாள். இதனை கண்டு அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர் உடனடியாக மகளை மீட்டு கே.கே. நகரில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசேதனை செய்தபோது ஏற்கனவே சிறுமி ஹரிவர்த்தினி மூச்சித் திணறல் எற்பட்டு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சிறுமி அதிகமாக முந்திரி சாப்பிட்டதால் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை எற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com