குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சேத்திருப்பு நடுநிலைப்பள்ளியில் குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
Published on

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே சேத்திருப்பு நடுநிலைப்பள்ளியில் குழந்தை திருமணம் தடுப்பு உறுதிமொழி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி கல்வி இயக்குனர் அறிவொளி உத்தரவின்படியும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பார்த்தசாரதி, வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி ஆகியோர் பரிந்துரையின் பேரிலும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பாலு தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சாந்தினி ரமேஷ் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் கணேசன், சுந்தரி தன்னார்வலர்கள் விஷாலி, சுஜிதா, சத்துணவு அமைப்பாளர் சத்யா, சமையலர் செல்வி, உதவி சமையலர் துர்கா மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com