அரூர்புனித மரியன்னை ஆலயத்தில் சிலுவைபாடு நிகழ்ச்சி

அரூர்புனித மரியன்னை ஆலயத்தில் சிலுவைபாடு நிகழ்ச்சி
Published on

அரூர்:

அரூரில் உள்ள புனித மரியன்னை ஆலயத்தில் புனித வெள்ளியையொட்டி சிலுவைபாடு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் இயேசு கிறிஸ்து போல் வேடமணிந்தவர் சிலுவையை சுமந்து மொரப்பூர் சாலையில் சென்றார். அப்போது சிலுவைபாடு குறித்து விளக்கி, சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் பங்குதந்தைகள் ஜான் மைக்கேல், பள்ளி தலைமை ஆசிரியர் பால் பெனடிக்ட், ராபின்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com