சிலம்பாட்ட போட்டியில் மாணவர்கள் சாதனை

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சிவகங்கை மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி நடந்தது.
சிலம்பாட்ட போட்டியில் மாணவர்கள் சாதனை
Published on

காரைக்குடி

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சிவகங்கை மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி நடந்தது. இதில் சிவகங்கை சீமை சிலம்பாட்ட வகுப்பில் பயிற்சிபெறும் மாணவ, மாணவிகள் தங்களது பள்ளியின் வாயிலாக கலந்து கொண்டனர். இப்போட்டியில் 6 பேர் முதல் இடத்தையும், 5 பேர் இரண்டாம் இடத்தையும், 5 பேர் மூன்றாம் இடத்தையும் என மொத்தம் 16 இடங்களை வென்று சிவகங்கை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இதில் முதல் இடம் பிடித்த மாணவர்கள் அரியலூரில் நடக்க உள்ள மாநில அளவிலான சிலம்ப போட்டியில் சிவகங்கை மாவட்டம் சார்பில் போட்டியிட தகுதி பெற்றுள்ளார்கள்.வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி சான்றிதழ்கள், பதக்கங்களையும் சாக்கோட்டை ஒன்றிய தலைவர் சரண்யா செந்தில்நாதன், அ.தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன் ஆகியோர் வழங்கினர். மேலும் பயிற்சி மாஸ்டர் சி.முனியாண்டியை பாராட்டி வாழ்த்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com