புழல் ஏரியில் குதித்து 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை - செல்போன் பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால் விபரீத முடிவு

செல்போன் பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த 10-ம் வகுப்பு மாணவி புழல் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
புழல் ஏரியில் குதித்து 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை - செல்போன் பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால் விபரீத முடிவு
Published on

சென்னை அடுத்த புழல் காவாங்கரை அழகிரி தெருவை சேர்ந்தவர் குமார். கார் டிரைவர். இவருடைய மகள் ஹரிப்பிரியா (வயது 15). இவர் செங்குன்றத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். ஹரிப்பிரியா அடிக்கடி செல்போனை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது பெற்றோர் அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஹரிப்பிரியா நேற்று காலை திடீரென வீட்டை விட்டு மாயமானதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அவரை எங்கு தேடியும் கிடைக்காததால் போலீசில் புகார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் புழல் ஏரி ஜோன்ஸ் டவர் அருகே சிறுமி பிணம் ஒன்று மிதப்பதாக புழல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை கைப்பற்றி விசாரித்தபோது, இறந்து கிடப்பது மாயமான ஹரிப்பிரியா என்பது தெரியவந்தது. இதுகுறித்து ஹரிப்பிரியாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் மகளின் உடலை பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. இதையடுத்து, போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com