ஏரியில் மூழ்கி 5-ம் வகுப்பு மாணவன் பலி

ஏரியில் மூழ்கி 5-ம் வகுப்பு மாணவன் பலியானான்.
ஏரியில் மூழ்கி 5-ம் வகுப்பு மாணவன் பலி
Published on

ஏரியில் மூழ்கி பலி

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, வடக்கலூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் வேளாங்கண்ணி. இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் இளைய மகன் கவின் (வயது 10). வடக்கலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று மாலை கவின் இயற்கை உபாதை கழிப்பதற்காக வடக்கலூர் ஏரிக்கரைக்கு சென்றான். அப்போது கவின் எதிர்பாராதவிதமாக ஏரிக்குள் தவறி விழுந்ததில் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

பிரேத பரிசோதனை

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சென்ற மங்களமேடு போலீசார் ஏரியில் இருந்து கவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக கவின் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com