நன்னிலம் அரசு கல்லூரியில் துப்புரவு பணி

நன்னிலம் அரசு கல்லூரியில் துப்புரவு பணி
நன்னிலம் அரசு கல்லூரியில் துப்புரவு பணி
Published on

தற்போது மழைக்காலம் என்பதால் சுகாதாரத்தை பேணி காக்கும் வகையில் நோய் பரவாமல் இருப்பதற்கு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நன்னிலத்தில் சுகாதாரத்தை பேணி காக்கும் வகையில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களிடையே சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நேற்று மதியம் நன்னிலம் அரசு பாரதிதாசன் உறுப்பு கலை கல்லூரி மாணவ-மாணவிகள் கல்லூரி வாசலில் இருந்து பஸ் நிலையம் வரை சாலைகளில் கிடந்த குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி துப்புரவு பணியில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com