அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் தூய்மைப்பணி

அருப்புக்கோட்டை புதிய பஸ்நிலையத்தில் தூய்மைப்பணி நடைபெற்றது.
அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் தூய்மைப்பணி
Published on

அருப்புக்கோட்டை நகராட்சி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஆகியவற்றின் சார்பில் தூய்மையே சேவை என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஆணையாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் ஒட்டுமொத்த தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது. அதனைத்தொடர்ந்து அனைவரும் தூய்மை இந்தியா திட்ட உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் வங்கி பணியாளர்கள், நகராட்சி சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com