தேங்காய் பறிக்க முயன்ற போது முறிந்து விழுந்த தென்னை மரம் - டிரைவர் பலி

பரங்கிப்பேட்டை அருகே தேங்காய் பறிக்க மரத்தில் ஏறியபோது தென்னை மரம் முறிந்ததில் கீழே விழுந்து டிரைவர் பலியானார்
தேங்காய் பறிக்க முயன்ற போது முறிந்து விழுந்த தென்னை மரம் - டிரைவர் பலி
Published on

கடலூர்

பரங்கிப்பேட்டை அருகே உள்ள தோப்பிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் திருப்பதி (வயது 27). டிரைவரான இவர் நேற்று காலை தேங்காய் பறிப்பதற்காக தனது வீட்டின் அருகே உள்ள ஒரு தென்னை மரத்தில் ஏறினார்.

அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக தென்னை மரம் திடீரென முறிந்து கீழே விழுந்தது. அப்போது மரத்துடன் கீழே விழுந்ததில் திருப்பதி பலத்த காயமடைந்தார்.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து படுகாயமடைந்து உயிருக்கு போராடிய திருப்பதியை மீட்டு சிகிச்சைக்காக பரங்கிப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் திருப்பதி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினா. இதுகுறித்து சீனிவாசன் கொடுத்த புகாரின்பேரில் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுனிதா, சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தேங்காய் பறிக்க மரம் ஏறியபோது, தென்னைமரம் முறிந்து விழுந்ததில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com