

கோவை,
கோவை மாவட்டம் போத்தனூர் – செட்டிபாளையம் சாலையில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் நேற்று (ஏப்ரல் 25) இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாயின. கரும்புகை எழுந்ததை கவனித்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.