இடிந்து விழும் நிலையில் பயணிகள் நிழலகம்

முத்துப்பேட்டை அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள பயணிகள் நிழலகத்தை புதிதாக கட்டித்தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
இடிந்து விழும் நிலையில் பயணிகள் நிழலகம்
Published on

தில்லைவிளாகம்:

முத்துப்பேட்டை அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள பயணிகள் நிழலகத்தை புதிதாக கட்டித்தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேதமடைந்த பயணிகள் நிழலகம்

முத்துப்பேட்டையை அடுத்த இடும்பாவனம் மேலவாடியகாடு பகுதியில் பயணிகள் நிழலகம் உள்ளது. இப்பகுதி மக்கள் வேதாரண்யம் செல்வதற்கும், முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை செல்வதற்கும் திருத்துறைப்பூண்டி செல்வதற்கும் இந்த பயணிகள் நிழலகத்தை பயன்படுத்தி வருகின்றனர். வெளி ஊர்களுக்கு வேலைக்கு செல்பவர்களும், பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் இந்த பயணிகள் நிழலகத்தில் காத்திருந்து பஸ்களில் ஏறி செல்கின்றனர்.

இடிந்து விழும் நிலையில் உள்ளது

இந்த நிலையில் இந்த பயணிகள் நிழலக கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. கட்டிடத்தில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றனர்.

எந்த நேரமும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால் இந்த பயணிகள் நிழலகத்தை பயன்படுத்தி பொதுமக்கள், மாணவ-மாணவிகள் அச்சப்படுகின்றனர். இதன் காரணமாக மழை, வெயிலில் நின்று பஸ்சில் ஏறி செல்லும் நிலை இருந்து வருகிறது.

புதிதாக கட்டித்தர வேண்டும்

இந்த சேதமடைந்த பயணிகள் நிழலகத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை பணி தொடங்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு பயணிகள் நிழலகத்தை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com