வாகன தணிக்கையில் ரூ.2½ லட்சம் அபராதம் வசூல்

குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் நடைபெற்ற வாகன தணிக்கையில் ரூ.2½ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
வாகன தணிக்கையில் ரூ.2½ லட்சம் அபராதம் வசூல்
Published on

பள்ளிபாளையம்

குமாரபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் பூங்குழலி தலைமையில் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த தணிக்கையில் சாலை வரியாக சுமார் 25 ஆயிரத்து 375 ரூபாயும் இணக்க கட்டணமாக ரூ.94 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. பிற குற்றங்களுக்கு இணக்க கட்டணமாக ரூ.2 லட்சத்து 48 ஆயிரத்து 600 அபராதம் விதிக்கப்பட்டது. தகுதி சான்று புதுப்பிக்கப்படாத 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

X

Daily Thanthi
www.dailythanthi.com