கலெக்டர் திடீர் ஆய்வு

புளியரை சோதனைச்சாவடியில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.
கலெக்டர் திடீர் ஆய்வு
Published on

செங்கோட்டை:

தமிழகத்தில் கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்கும் பொருட்டு கன்னியாகுமரி, தென்காசி, கோவை, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர்.

தென்காசி மாவட்டத்திற்கு திருச்சி பறக்கும் படை உதவி இயக்குனர் அருள்முருகன் தலைமையில் 3 பேர் கொண்ட அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் காலை முதல் புளியரை சோதனைச்சாவடியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மாலையில் புளியரை சோதனைச்சாவடிக்கு தென்காசி மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் ஆகியோர் வந்தனர். பின்னர் அங்கு கலெக்டர் ஆய்வு செய்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com