வெவ்வேறு சம்பவங்களில் கல்லூரி மாணவர், வியாபாரி தற்கொலை

நெல்லையில் வெவ்வேறு சம்பவங்களில் கல்லூரி மாணவர், வியாபாரி தற்கொலை செய்து கொண்டனர்.
வெவ்வேறு சம்பவங்களில் கல்லூரி மாணவர், வியாபாரி தற்கொலை
Published on

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் அருணாசலபுரம் 'சி' காலனியை சேர்ந்தவர் லட்சுமணன். இவருடைய மகன் செல்வ பிபின் (வயது 23). இவர் பாளையங்கோட்டையில் உள்ள கல்லூரியில் எம்.ஏ. ஆங்கிலம் முதலாமாண்டு படித்து வந்தார். செல்வ பிபின் கடந்த சில நாட்களாக சோகமாக இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு வீட்டின் மாடியில் உள்ள அறையில் தங்கி இருந்த செல்வ பிபினை அவருடைய சகோதரி, சாப்பிட அழைக்க சென்றார். அப்போது அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

அங்கு கேபிள் ஒயரில் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் செல்வ பிபின் இறந்து கிடந்தார். இதுகுறித்து உடனடியாக பாளையங்கோட்டை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அதேபோல் கே.டி.சி.நகர் அண்ணாமலையார் நகரை சேர்ந்தவர் மாரியப்பன் (50). பால் வியாபாரி. இவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட மாரியப்பன் நேற்று வீட்டின் மாட்டு தொழுவத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே மாரியப்பன் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இந்த 2 சம்பவங்கள் குறித்தும் பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com