அடையாளம் தெரியாத வாகனம் மோதி கல்லூரி மாணவர் பலி; நண்பர் படுகாயம்

ஆரல்வாய்மொழி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கல்லூரி மாணவர் பலியானார். நண்பர் படுகாயம் அடைந்தார்.
அடையாளம் தெரியாத வாகனம் மோதி கல்லூரி மாணவர் பலி; நண்பர் படுகாயம்
Published on

ஆரல்வாய்மொழி:

ஆரல்வாய்மொழி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கல்லூரி மாணவர் பலியானார். நண்பர் படுகாயம் அடைந்தார்.

இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

கல்லூரி மாணவர்

ஆரல்வாய்மொழி அருகே குமாரபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார், பிளம்பர். இவருடைய மகன் அபினாஷ் (வயது 19). இவர் செண்பகராமன்புதூர் பகுதியில் உள்ள ஒரு தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் செல்வகுமார் (19). இவர் அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார்.

அபினாஷ் மற்றும் செல்வகுமார் ஆகிய இருவரும் நண்பர்கள் ஆவார்கள். நேற்று இரவு 7 மணி அளவில் இருவரும் மோட்டார் சைக்கிளில் காவல் கிணறு சென்று விட்டு, மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தனர். குமாரபுரம் ஜங்ஷன் அருகில் வரும் போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அபினாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

நண்பர் படுகாயம்

அவருடைய நண்பர் .செல்வகுமார் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த விபத்து தொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com