ரெயில் மோதி கல்லூரி மாணவர் பலி

அரியூரில் ரெயில் மோதி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
ரெயில் மோதி கல்லூரி மாணவர் பலி
Published on

காட்பாடி

வேலூர் தொரப்பாடி பகுதியை சேர்ந்தவர் சரவணன், கார் டிரைவர். இவரது மகன் சுகந்தன் (வயது 21). காட்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று  இரவு 8 மணியளவில் தனது நண்பர்களுடன் வேலூர் அரியூர் ரெயில்வே கேட் தண்டவாளத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில் வந்துள்ளது. நின்று கொண்டிருந்த நண்பர்கள் விலகிவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த சுகந்தன் விலகிச்செல்வதற்குள் ரெயில் அவர் மீது மோதியது. இதில் சுகந்தன் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து காட்பாடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து காட்பாடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com