கல்லூரி மாணவி மாயம்

கல்லூரி மாணவி மாயமானார்.
கல்லூரி மாணவி மாயம்
Published on

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள த.சோழங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு மகள் அட்சயா (வயது 18). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.டெக். முதலாம் ஆண்டு படித்து வருகிறார். விடுமுறையில் வீட்டிற்கு வந்த அட்சயா நேற்று முன்தினம் கடைவீதிக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. பின்னர் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாய் ரேவதி உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான கல்லூரி மாணவி அட்சயாவை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com