கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவில் வடசேரி பகுதியில் ஆடைகள் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு 19 வயதில் மகள் உள்ளார். நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். அதே நிறுவனத்தில் பள்ளிவிளையை சேர்ந்த 45 வயதுடைய ஒருவா பணியாற்றி வந்தார். மாணவியின் தந்தை தொழில் ரீதியாக வெளியே செல்வது வழக்கம்.

இதனை சாதகமாக பயன்படுத்தி வீட்டில் தனியாக இருந்த மாணவியிடம் அந்த ஆசாமி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுபற்றி மாணவி தனது தந்தையிடம் கூறினார். அதிர்ச்சியடைந்த தந்தை இதுபற்றி நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனை அறிந்ததும் அந்த நபர் தலைமறைவாகி விட்டார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com