கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம்: நாகூரில் சாலை மறியல் போராட்டம்...!

கல்லூரியில் கட்டணம் செலுத்ததற்காக வகுப்பறைக்கு வெளியே நிறுத்தப்பட்டதாக கூறப்படும் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம்: நாகூரில் சாலை மறியல் போராட்டம்...!
Published on

நாகை,

நாகை மாவட்டம் நாகூரை சேர்ந்தவர் சுப்ரமணியன். கூலித்தொழிலாளியான இவரது மகள் சுபாஷினி(வயது 19). இவர், நாகை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிசியோதெரபி முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் சுபாஷினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கல்லூரியின் பருவ கட்டணம் செலுத்தாமல் இருந்த மாணவி சுபாஷினியை வகுப்பறையின் வெளியில் நிற்க வைத்ததால் அவமானம் அடைந்து சுபாஷினி தற்கொலை செய்து கொண்டதாக மாணவியின் பெற்றோர், நாகூர் போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் நாகூர் போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் கல்லூரி தாளாளர், முதல்வர் மற்றும் வகுப்பு பொறுப்பாளர் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் மாணவி சுபாஷினி தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி அப்பகுதி இளைஞர்கள் தடையை மீறி சாலையில் பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போராட்டக்காரர்கள் - போலீசார் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com