சென்னையில் கல்லூரி மாணவிகள் குடுமிப்பிடிச்சண்டை

சென்னையில் கல்லூரி மாணவிகள் குடுமிப்பிடிச்சண்டை போடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னையில் கல்லூரி மாணவிகள் குடுமிப்பிடிச்சண்டை
Published on

சென்னை:

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் அரசு கலை அறிவியல் மற்றும் தொழிற்கல்வி கல்லூரி உள்ளது. இங்கு படித்து வரும் மாணவிகள் நேற்று கல்லூரி முடிந்ததும் புதுவண்ணாரப்பேட்டை லட்சுமி கோவில் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்துகொண்டிருந்தனர்.

அப்போது இருதரப்பு மாணவிகளுக்கிடையில் பஸ் நிறுத்தத்திலேயே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் ஒருவருக்கொருவர் குடுமிப்பிடிச்சண்டையில் ஈடுபட்டனர்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக கல்லூரி மாணவ, மாணவிகள் இருவரையும் விலக்கி விட்டுள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவிகளை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் மாணவிகள் போட்ட குடுமிப்பிடிச்சண்டையை யரோ வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பியதில் வைரலானது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com