நண்பர்கள் இடையே மோதல்; 3 பேர் படுகாயம்

நண்பர்கள் இடையே மோதலில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
நண்பர்கள் இடையே மோதல்; 3 பேர் படுகாயம்
Published on

கூத்தாநல்லூர் அருகே உள்ள வெள்ளக்குடி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் மணிகண்டன் (வயது25), ராமன் (23), லட்சுமணன் (20), சுபாஷ் (25), டேவிட் (24). இவர்கள் 5 பேரும் நண்பர்கள். இந்த நிலையில் 5 பேரும் அதே பகுதியில் உள்ள ஒரு இடத்தில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது, அவர்களுக்குள் திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் சுபாஷ், டேவிட் ஆகிய 2 பேரும் சேர்ந்து மணிகண்டன், ராமன், லட்சுமணன் ஆகிய 3 பேரையும் கத்தியால் குத்தியதில், 3 பேரும் படுகாயம் அடைந்து, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து கூத்தாநல்லூர் போலீசில் மணிகண்டன் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சுபாஷ் மற்றும் டேவிட்டை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com