இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கவர்னரை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ரவி கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தின்போது, காரல்மார்க்ஸ் பற்றி சர்ச்சையான கருத்துக்களை கூறிவரும் கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com