இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சங்கரன்கோவிலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

சங்கரன்கோவில்:

காரல் மார்க்ஸ் குறித்து தமிழக கவர்னர் அவதூறாக பேசியதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சங்கரன்கோவில் தேரடி திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்ட செயலாளர் இசக்கிதுரை தலைமை தாங்கினார். சங்கரன்கோவில் தாலுகா செயலாளர் கனகராஜ், துணைச் செயலாளர்கள் மனுவேல்ராஜன், பழனிமுருகன், மாவட்டக்குழு உறுப்பினர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர் சுப்பராயன் எம்.பி., ஏ.ஐ.டி.யு.சி. மாநில தலைவர் காசி விஸ்வநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் வேலாயுதம், மாவட்ட பொது செயலாளர் சுப்பையா, ஒன்றிய செயலாளர்கள் வேலு, கிட்டப்பா, ஜீவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com