இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கல்லணையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

திருக்காட்டுப்பள்ளி:

பூதலூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கல்லணையில் உள்ள சர் ஆர்தர் காட்டன் சிலைக்கு மாலை அணிவித்தனர்.பின்னர் அங்கேயே சர்ஆர்தர் காட்டன் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும், காவிரி டெல்டா பகுதியில் கூடுதலாக மணல் குவாரிகள் திறக்க கூடாது என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தஞ்சை மாவட்ட மாதர் சங்க செயலாளர் கண்ணகி, ஒன்றிய நிர்வாகிகள் ராமச்சந்திரன், துரைராஜ், திருக்காட்டுப்பள்ளி நகர செயலாளர் பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com