இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம்
Published on

பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விலைவாசி உயர்வு மற்றும் மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்தும், வேலை வாய்ப்புகளை அதிகம் உருவாக்கி வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்க வலியுறுத்தியும், இந்தி திணிப்பை கைவிட வலியுறுத்தியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார்.

இதனைத்தொடர்ந்து வெங்கடேசபுரம் பிரதான சாலையில் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் வீர.ஞானசேகரன், ராஜூ, ஒன்றிய செயலாளர் முத்துசாமி, ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஜெயராமன் மற்றும் 8 பெண்கள் உள்பட 28 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com