விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகள்: விக்கிரவாண்டி அருகே கடும் போக்குவரத்து நெரிசல்

உளுந்தூர் பேட்டை, விக்கிரவாண்டி சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்துநெரிசல் ஏற்பட்டுள்ளது.
விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகள்: விக்கிரவாண்டி அருகே கடும் போக்குவரத்து நெரிசல்
Published on

விக்கிரவாண்டி,

காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் ஆயுத பூஜை தொடர் விடுமுறையால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் இன்று சென்னைக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். கார் உள்ளிட்ட வாகனங்களில் மக்கள் சென்னையை நோக்கி படையெடுத்து வருவதால், இன்று காலையில் இருந்தே திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது.

இதனால், உளுந்தூர் பேட்டை, விக்கிரவாண்டி சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்துநெரிசல் ஏற்பட்டுள்ளது. விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாகவும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. சுங்கச்சாவடியில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இதனால், பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com