வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு கோலப்போட்டி

வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு கோலப்போட்டி
வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு கோலப்போட்டி
Published on

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு கோலப்போட்டி நடைபெற்றது. இதில் 11 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 20 மகளிர் குழுவினர் கலந்து கொண்டு கோலங்களை வரைந்தனர். அந்த கோலங்களை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வையிட்டார். இப்போட்டியில் பங்குபெற்ற மகளிர் குழுவினர் தெரிவிக்கையில், தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாக்காளர்கள் கட்டாயம் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் வாக்குரிமை என்பது ஜனநாயக கடமை ஆகும். அதேபோல் வாக்காளர்கள், வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். என தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தேர்தல் பிரிவு தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் மகளிர் குழுவினர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com