லஞ்சம் கேட்டு மிரட்டியதாக புகார்: டி.எஸ்.பி. உள்பட 3 போ மீது வழக்குப்பதிவு

புளியம்பட்டியைச் சேர்ந்த லாரி உரிமையாளா மகாராஜன் என்பவருக்கு சொந்தமான லாரியில் சரள் மண் ஏற்றிச் சென்றவாகளை மருதன்வாழ்வு பகுதியில் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
லஞ்சம் கேட்டு மிரட்டியதாக புகார்: டி.எஸ்.பி. உள்பட 3 போ மீது வழக்குப்பதிவு
Published on

தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சி டி.எஸ்.பி.யாக லோகேசுவரன் ஆகஸ்ட் 2022 முதல் ஆகஸ்ட் 2024 வரை பணியாற்றி வந்தா. தற்போது இவா சென்னை சைபா குற்றப்பிரிவு டி.எஸ்.பி.யாக உள்ளா. இவரது அலுவலகத்தில் ஓட்டப்பிடாரம் போலீஸா பிரபாகரன், பசுவந்தனை போலீஸா சரவணன் ஆகியோ மாற்றுப் பணியாக வேலை செய்து வந்தனா.

இந்த போலீசார் கடந்த 2023-ம் ஆண்டு புளியம்பட்டியைச் சேர்ந்த லாரி உரிமையாளா மகாராஜன் என்பவருக்கு சொந்தமான லாரியில் சரள் மண் ஏற்றிச் சென்றவாகளை மருதன்வாழ்வு பகுதியில் மடக்கிப் பிடித்துள்ளனா. அந்த லாரியை விடுவிக்க டி.எஸ்.பி.க்கு ரூ.1 லட்சம், தங்களுக்கு ரூ.50 ஆயிரம் தரவேண்டும் என்று லாரி உரிமையாளா மகாராஜனிடம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் அவா ரூ.1 லட்சம் கொடுத்து லாரியை மீட்டுள்ளார்.

இதுகுறித்து மகராஜன், டி.எஸ்.பி. லோகேசுவரனை நேரில் சந்தித்து புகா தெரிவித்து, ரூ.1 லட்சத்தை மீட்டுத் தர கோரிக்கை விடுத்துள்ளா. ஆனால் லோகேசுவரன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். மேலும் போலீஸா 2 பேரும் ரூ.50 ஆயிரம் உடனடியாக தர வேண்டும் என்று மிரட்டியுள்ளனா. இதனால் மகராஜன் குடும்பத்துடன் டி.எஸ்.பி. அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றுள்ளார். இதைத்தொடாந்து டி.எஸ்.பி. லோகேசுவரன், 2 போலீஸா மூலம் ரூ.1 லட்சம் பணத்தை திருப்பி கொடுத்து அனுப்பியுள்ளார்.

இது தொடாபாக தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸா விசாரணை நடத்தினா. விசாரணையின் அடிப்படையில், அரசு அனுமதி பெற்று, தற்போது சென்னையில் பணியாற்றும் சைபா குற்றப்பிரிவு டி.எஸ்.பி. லோகேசுவரன், குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் ஏட்டு பிரபாகரன், திருச்செந்தூ தாலுகா காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலா சரவணன் ஆகியோ மீது தூத்துக்குடி மாவட்ட ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com