தவறான சிகிச்சையால் வளர்ப்பு நாய் உயிரிழந்ததாக புகார் - தமிழக அரசு, கால்நடைத்துறை இயக்குனர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

தவறான சிகிச்சையால் வளர்ப்பு நாய் உயிரிழந்ததாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு மற்றும் கால்நடைத்துறை இயக்குனர் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தவறான சிகிச்சையால் வளர்ப்பு நாய் உயிரிழந்ததாக புகார் - தமிழக அரசு, கால்நடைத்துறை இயக்குனர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
Published on

சென்னை,

திருவள்ளூர் மாவட்டம் மணவூரைச் சேர்ந்த சுமதி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், தான் வளர்த்து வந்த 9 வயதான ஜெர்மன் ஷெப்பர்ட் வகை நாய், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாகவும், கடம்பத்தூர் கால்நடை மருத்துவர் அளித்த மருந்து காரணமாக கோமா நிலையை அடைந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பின்னர் தவறான மருந்துகள் கொடுக்கப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்ததால், தனது நாய்க்கு சிகிச்சை அளிக்க மறுத்ததாகவும், இதனை தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் தனது நாய் இறந்து போனதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே நாய் உயிரிழந்ததற்கான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மருத்துவர்கள் மீது விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு குறித்து பிப்ரவரி 1 ஆம் தேதிக்குள் தமிழக அரசு மற்றும் கால்நடைத்துறை இயக்குனர் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com